யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் இன்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ் பல்கலை மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று (மார்ச்-09) 705 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா ஆய்வுகூட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த பரிசோதனை முடிவுகள் தொடர்பில் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இன்றைய பரிசோனையில் வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 22 பேருக்கு (வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 11 பேருக்கு)
மன்னார் மாவட்டத்தில் 17 பேருக்கு
வவுனியா மாவட்டத்தில் 04 பேருக்கு
இவ்வாறு இன்றைய தினம் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் குறித்த விபரம் விரைவில்...
No comments:
Post a Comment