தமிழகத்தின் கோவை அருகே அடுத்தவர் தட்டில் இருந்து பரோட்டா எடுத்து உட்கொண்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் இடையர்பாளையம் சிவாஜி காலனி சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25). இவருக்கு தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் 2 பேர் நண்பர்களாகினர்.
நாளடைவில் நண்பர்கள் வேலை பார்க்கும் செங்கல் சூளைக்கே ஜெயக்குமார் சென்று நண்பர்களுடன் மது அருந்தி வந்தார். இதேபோல நேற்றும் செங்கல் சூளைக்கு சென்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.
அந்த சமயம் செங்கல் சூளையின் பக்கத்து குடியிருப்பில் தங்கியிருந்த வெள்ளிங்கிரி (51) என்பவர் உண்பதற்கு பரோட்டா கொண்டு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த ஜெயக்குமாருக்கு, வெள்ளிங்கிரி பரோட்டா உண்பதைப் பார்த்து நாக்கு ஊறியுள்ளது. உடனே வெள்ளிங்கிரியிடம் எந்த அனுமதியும் பெறாமல் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்த தட்டிலுள்ள பரோட்டாவை எடுத்து ஜெயக்குமார் உட்கொண்டுள்ளார்.
ஜெயக்குமாரின் இந்த அநாகரீகமாக செயல் வெள்ளிங்கிரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜெயக்குமாரை அவர் கண்டித்தார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment