நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
க.பொ.த.சாதாரண தர பரீட்சை மற்றும் கொவிட் 19 ஆகியவற்றினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகள், மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
கொவிட் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றபோதிலும் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகளவில் இருந்ததாக வலய கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment