Sponsor

Sunday, March 14, 2021

இலங்கையில் தடுப்பூசி பெற்றதனினால் ஏற்டபட்ட விளைவு....!



 வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

அதன்படி, எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டு நாட்டிற்கு வரும் இலங்கையர்களை அவர்களது வீட்டில் சுய தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் மற்றும் நாட்டிற்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் இந்த புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டிலிருந்து குறுகிய காலத்திற்காக வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வருபவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிவழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வழிகாட்டுதல்கள் கடந்த 10ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விசேட அரச பயணங்கள், உத்தியோகபூர்வ பயணங்கள் மற்றும் வர்த்தகரீதியான பயணங்களின் பின்னர் நாட்டிற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment