Sponsor

Wednesday, March 10, 2021

பேருந்தில் தூங்கிய டிரைவர்… கடைசியில் நடந்த சம்பவத்தைப் பாருங்க...!



 சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார்.

பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும். இங்கேயும் அப்படித்தான் ஒரு டிரைவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே அசந்து தூங்கிவிட்டார்.

இதனால் பிரதான தார்ச்சாலையில் இருந்து பேருந்து நகர்ந்து செல்லத் துவங்கியது. சிறிதுநேரத்தில் அந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. பேருந்தில் டிரைவர் இருக்கையின் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த வி பத்து மிகத் தத்துரூபமாக பதிவாகியுள்ளது. குறித்த வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment