Sponsor

Friday, March 12, 2021

யாழ்ப்பாண வானில் சுற்றிப் பறக்கப்போகும் சர்வதேச விமானங்கள்!

 


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தை இன்று கூறியுள்ளார்.

அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதுடன் அது விடுவித்து புனரமைக்கப்படவேண்டிய தேவை உள்ளதாகவும் மக்களால் கூறப்படுகின்றது.

அத்துடன் இந்த வீதியின் மயிலிட்டி சந்தியிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம்வரை சேதமடைந்துள்ள வீதியை புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment