Sponsor

Tuesday, February 16, 2021

மனைவி இறந்த சோகத்தில், 2 பிஞ்சு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்!!

 


சென்னையில், மனைவி, இறந்த, சோகத்தை தாங்கமுடியாத கணவன், தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏசி மெக்கானிக் வினோத் (32), தனது மனைவி கவிதா மற்றும் இரண்டு குழந்தைகளான நவின் (3) மற்றும் பிரவீன் (1) ஆகியோருடன் சென்னை கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

 
ஒரு மாதத்திற்கு முன்பு, வினோத்துடன் சண்டைபோட்டுக்கொண்டு கவிதா பொன்னேரியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று, அங்கேயே தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
 
மனைவி இறந்ததால் மனச்சோர்வடைந்த வினோத், அதன்பின்னர் சரியாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அவர் கடந்த வாரம் பொன்னேரியிலிருந்து கோருக்குப்பேட்டைக்கு தனது குழந்தைகளை அழைத்து வந்துள்ளார்.
 
சனிக்கிழமை காலை, வினோத் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் அவரது தாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
வினீத்தின் தாயும் சகோதரரும் விரைந்து சென்று கதவை உடைத்துள்ளனர். அப்போது, உள்ளே இரண்டு குழந்தைகளும் தரையில் மயக்கத்தில் கிடந்ததையும், வினோத் தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
குழந்தைகள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
விஷம் அல்லது கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, எனவே அவர்கள் தலையணைகளால் முகத்தில் அழுத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
மரணத்திற்கான காரணத்தை அறிய சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
 
ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
 
இந்தக் குடும்பம் அப்பகுதியில் நன்றாக வாழ்ந்துவந்த நிலையில், கவிதாவின் தற்கொலை மற்றும் வினோத் தங்கள் குழந்தைகளை கொல்ல முடிவு செய்ததும் தற்கொலை செய்துகொண்டதும் மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment