ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டு போர் காரணமாக, அங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட உணவுக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான அரசு ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரினால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட நிலையில், கொரோனா காரணமாக மேலும் கடுமையாக பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 13 வயது சிறுமி ஒருவர், வெறும் 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment