ஹட்டன், கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள தலவாக்கலை சென்க்லெயார் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் கிடைத்த PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொட்டகல பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர ராகவன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவருடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய இன்று கிடைத்த முடிவுகளுக்கு அமைய 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தொற்றுக்குள்ளான உறுப்பினர்களில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான குடும்ப உறுப்பினர் உட்பட 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment