கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொற்று உறுதியான 4 ஆயிரத்து 746 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரையில் 79 ஆயிரத்து 480 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 435 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment