Sponsor

Sunday, February 14, 2021

திருகோணமலை கிண்ணியா பகுதியில் கைக்குண்டொன்று மீட்பு..!



திருகோணமலை – வான் எல ஆயிலியடி பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்தனர்.கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (12) மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வயல் காணி ஒன்றில் இருந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இக் கைக்குண்டு துருப்பிடித்த நிலையில் உள்ளதாகவும் இதனை வெடிக்க வைப்பதற்காக திருகோணமலை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற உள்ளதாகவும் கிண்ணியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment