Sponsor

Saturday, February 20, 2021

வட மாகாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!

 


வட மாகாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், மன்னார் பொது வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட, மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவரும், மற்றொருவர், பூநகரி வலைப்பாடு பகுதியில் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடையவர் எனவும் மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment