கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கிய விரக்தியில் விவசாயி ஒருவர் வயல் நடுவே படுத்து கண்ணீர் விட்டு கதறினார்.
குமளங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற அந்த விவசாயி, ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி, 4 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளார்.
அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு பெய்த தொடர் கனமழை நெற்பயிர் மொத்தத்தையும் மூழ்கடித்தது. விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஜோதி, நீர் சூழ்ந்த வயலில் விழுந்து புரண்டு கண்ணீர் விட்டார்.
விவசாயி ஜோதியின் இதே கையறு நிலையில்தான் தாங்களும் உள்ளதாக கடலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள் கூறுகின்றனர்
No comments:
Post a Comment