பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார்.
அவர் தமது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
வரத்தகம், முதலீடு மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சிகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்களையும் இதன்போது நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாஸா தகனம் சம்மந்தமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment