Sponsor

Sunday, February 21, 2021

கோழிகளைத் திருடிய இராணுவ வீரர் கைது



 நான்கு கோழிகளைத் திருடிய இராணுவ வீரர் நேற்று இரவு காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் போத்தல பகுதியைச் சேர்ந்த அண்டுரட்வில பகுதியில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 2,500 ரூபாய் மதிப்புள்ள நான்கு கோழிகளை திருடியதாக போத்தலவின் வல்பிட்ட பகுதியில் வசிப்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment