வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து, தனது மகனை தேடி வந்த தாயார் ஒருவர், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கைவேலி- புதுக்குடியிருப்பை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கனகமணி என்ற தாயாரே சுகயீனம் காரணமாக நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான சுந்தரலிங்கம் சுரேஷ்குமார், கடந்த 2009 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின்போது, காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் அன்றுமுதல், தனது மகனை தேடிவந்த தாயார் இறுதியில் மகனை கண்டுப்பிடிக்க முடியாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக்குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்று வரை வட.கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த தாயாரும் நேற்று உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரின் இழப்பு, அவரது குடும்பத்தாருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment