Sponsor

Saturday, February 20, 2021

யாழில் கடலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் - இளம் குடும்பஸ்தர் பலி!

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,


மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


குறித்த சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.


விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment