பாலசுப்பிரமணியம் தவராணி அன்னையின் அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வன்னி மண் நற்பணி மன்றத்தின் மூலமாக தங்கம்மா முதியோர் இல்ல முதியோர்களுக்கு சிறப்பு உணவு வழங்கி வைக்கப்பட்டது
மேலும் கூறியவை;
இதற்கு உரிய நிதி பங்களிப்பை அன்னாரின் மகனான கணனி விஞ்ஞானி பிரதீபன் பாலசுப்பிரமணியம் (தீபன் பினான்ஸ் சேர்விஸ் உரிமையாளர்) , காப்புறுதி முகவர் திருமதி.திலகதீபா ஜனதீபன் மற்றும் வைத்திய கலாநிதி விஜயதீபன் பாலசுப்பிரமணியம் ஆகியோரினால் வழங்கப்பட்டது.
நிதி பங்களிப்பு செய்த எம் உறவுகளுக்கு முதியோர் இல்லம் சார்பாகவும் மன்றம் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு திரு திருமதி பாலசுப்பிரமணியம் தவராணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
வன்னிமண் நற்பணி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
No comments:
Post a Comment