Sponsor

Wednesday, March 3, 2021

யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்க்கு 20 வருட சிறை தண்டனையா?

 


யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயாருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர்.

தண்டனைச்சட்டத்தின் பிரிவு 300,308, மற்றும் 308 ஏ ஆகியவற்றிஹ்ன் கீழ் சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படலாம் என பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் குழந்தையின் தாயார் பொலிஸாரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment