Sponsor

Tuesday, March 2, 2021

இளம் யுவதியின் சடலத்தை பயணப் பொதியில் கொண்டுவந்தவர் யார்? உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்

 



இளம் பெண் ஒருவரின் தலையற்ற உடலை பொதியிட்டு கொழும்பு டாம் வீதிக்கு கொண்டு வந்து கைவிட்டுச்சென்றவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேகநபர் புத்தள காவல்துறையை சேர்ந்த உதவி பரிசோதகர் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளம் பெண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போனதாக அண்மையில் முறையிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவரின் உடலம் ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கிடத்திச்செல்லப்பட்டமை சீசீடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டது.

இதேவேளை பயணப்பொதி ஒன்று தொடர்பில் டாம் வீதி வர்த்தகர்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோதே அதில் பெண்ணின் உடலம் இருப்பது கண்டறியப்பட்டது.

No comments:

Post a Comment