Sponsor

Thursday, March 4, 2021

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – 2 வயது பிள்ளையின் சடலம் மீட்பு

 


கிளிநொச்சி வட்டக்கச்சி 5ம் வீட்டுத் திட்டம் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் மற்றைய பிள்ளைகள் இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

 

No comments:

Post a Comment