Sponsor

Tuesday, March 9, 2021

ரஞ்சன் ராமநாயக்கவை மிருகத்தை போன்று இழுத்துச் சென்ற அதிகாரிகள் ; வெளியான பகீர் காணொளி

 ரஞ்சன் ராமநாயக்க அதிகாரிகளால் மிருகத்தை போன்று நடத்தப்படும் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சிறையில் அடைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பில் உள்ள இலங்கை பத்திரிகையாளர் மன்றத்தின் முன் அழைத்து வரப்பட்டார்.


அங்கிருந்து ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அழைத்து செல்லும் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அவரை பேருந்திற்குள் இழுத்து சென்று ஏற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது தான் கொலை செய்யவில்லை, நீதிக்காகவே போராடினேன் என்னை இப்படி நடத்த வேண்டாம் என அவர் கூச்சலிட்டுள்ளார்.


எனினும் அதனை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள் அவரை பலவந்தமாக இழுத்து சென்று பேருந்தில் ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நில்கையில் அதன் போது எடுக்கப்பட்ட காணொளியை ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோபூர்வ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment