திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் 35 தடவைகள் குத்தி காயப்படுத்திய சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சந்தியில் நடந்துள்ளது.
கணவன் மனைவிக்கு இடையிலான வன்முறை, இறுதியில் நடுவீதியில் வைத்து ஒருவரின் உயிரை எடுக்குமளவிற்கு துணிந்துவிட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவது,
மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த கணவன் வழி மறித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும்,குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது அந்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபர் மனைவியை வெட்டுவதை கண்டு அதை தடுத்து நிறுத்தாமல் திரும்பி சென்றுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமரா காட்டுகின்றன.
சம்பவத்தில் படு காயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment