Sponsor

Sunday, February 21, 2021

குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியின் கழுத்தை சமையல் கத்தியால் துண்டாக்கி உடல் மீது காரை ஏற்றி கொடூரமாக சைக்கோ!



 சென்னையில் குடும்ப பிரச்சனை காரணமாக மருத்துவர் தனது மனைவியின் கழுத்தை சமையல் கத்தியால் துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்த 40 வயதான மருத்துவர் கோகுல்குமார் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பார்த்து வருகிறார்.

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனித வளத்துறையில் வேலை பார்த்து வரும் கீர்த்தனா(33) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல்குமார் திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் இல்லை. கொரோனா ஊரடங்கு தொடங்கிய பின்னர் கோகுல்குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் மருத்துவர் கோகுல்குமாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.இந்த தொல்லையும் டார்ச்சரும் தாங்காமல், கீர்த்தனா கோகுலை பிரிந்து செல்ல முடிவு செய்தார்.

6 மாதங்களுக்கு முன்னாடியே விவாகரத்து கேட்டு மனுவும் அளித்துவிட்டார். அத்துடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கும் கிளம்பி போய்விட்டார். இது கோகுலுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது..

வெள்ளிக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடியவே, ஆத்திரத்தில் சமையலறைக்கு சென்ற கோகுல் கத்தியுடன் வந்து கீர்த்தனாவை தாக்கியுள்ளார்.

இதில் அவரது கழுத்து துண்டானதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் கீர்த்தனாவின் முடியை பிடித்து வெளியே இழுத்து வந்து பலமுறை காரையும் ஏற்றி கொன்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து காருடன் மாயமாகிடுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், கீர்த்தனாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, கோகுல்குமாரின் கார் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே விபத்தில் சிக்கியதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் அங்கு விரைந்து சென்ற பொலிசார் கோகுல்குமாரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment