Sponsor

Wednesday, March 10, 2021

மோதல் மரணத்தில் முடிந்தது.. நேற்றிரவு நடந்த பயங்கரம்!



 புத்தளத்தில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு செவ்வாய்க்கிழமை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.

மோதல் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இது போன்ற வன்முறைச்சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

No comments:

Post a Comment