மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்திய அணிக்கு செப்டம்பர் 14ம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளதாலும், அக்டோபர் கடைசியில் டி20 உலகக்கோப்பை தொடங்கிவிடும் என்பதாலும், செப்டம்பர் மாத பாதியில் தொடங்கி, அக்டோபர் பாதிக்குள் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment