கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடல்நீரில் அடித்துவந்து கரையொதுங்கிய பொருட்களைத் தொட்டவர்களில் பலருக்கு தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுவரை கை மற்றும் கால்களில் தோள் சிவப்பு சிறமாக மாறி சிலருக்கு தோலில் அரிப்பு ஏற்படத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.இதேவேளை எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து கடலில் வீழ்ந்த பொருட்களில் சில பொதிகள் நீர்கொழும்பு உட்பட கடலோரப் பிரதேசங்களில் சேர்ந்தன.
அவற்றின் பல பொதிகள் அப்பிரதேச மக்களால் சுமந்து செல்லப்பட்டன.
No comments:
Post a Comment