Sponsor

Sunday, May 30, 2021

தீ விபத்துக்குள்ளான கப்பல் கேப்டனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது....!



 தீ விபத்துக்குள்ளான எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் தலைவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த நிலையில், தலைவரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து, பணிக்குழாமினரிடம் நாளை வாக்குமூலம் பெறப்படவுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment