Sponsor

Sunday, May 9, 2021

கொரோனா அபாயத்தில் தெற்காசியாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இலங்கை!

 


இலங்கையில் கொரோனா பரவல் வேகம் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தினமும் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் பிரபல Worldometers இணையத்தளத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நேபாளத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அதிகரிப்பு 105 வீதமாகும்.அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம், அந்த நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 11 வீதமாகும். அது தெற்காசியாவில் குறைந்த நோயாளர்களின் வீதமாகும்.

அதற்கமைய இந்த பட்டியலில் முதலாது இடத்தை நேபாளமும், இரண்டாவது இடத்தில் இலங்கையும் மூன்றாவது இடத்தில் மாலைத்தீவும் பதிவாகியுள்ளன.

No comments:

Post a Comment