Sponsor

Saturday, May 1, 2021

உடன் அமுலாகும் வகையில் தலைநகர் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

 



உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் 4 மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


அந்தவகையில், கொழும்பு, காலி, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


அதன்படி கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிலுள்ள நாம்பமுனுவ, கொரக்கபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் கொடஹேன, தல்கஸ்கொட, ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்த கண்டிய பொலிஸ் பிரிவின் கதிரபுர, தெஹியத்த கண்டிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவின் ஹப்புகொட கிராமசேவகர் பிரிவு ஆகியன இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 


No comments:

Post a Comment