Sponsor

Tuesday, May 18, 2021

கிளிநொச்சியில் திடீரென தீப்பற்றிய வீடு!

 


கிளிநொச்சி உதயநகர் பகுதியில் திடீரென வீடு ஒன்று தீப்பிடித்து எரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று காலை 11 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை அடுத்த பிரதேச மக்கள் குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில், அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் குறித்த தீ விபத்தில் வீட்டு பாவனை பொருட்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகியுள்ள நிலையில், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment