Sponsor

Friday, May 21, 2021

இரண்டு கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம் ,மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்..!

 


களுத்துறை – நாகொட வைத்தியசாலையின் கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் இருந்து இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.மேலும் வைத்தியசாலையின் மதில் மீதேறி அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொவிட் 19 தொற்று உறுதியாகி வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேட குழுவொன்றினால் இந்த ஆலோசனை அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 1,089 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment