Sponsor

Wednesday, May 12, 2021

மொரட்டுவை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரால் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்!



 மொரட்டுவை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரால் மோசமாக நடத்தப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முச்சக்கர வண்டி ஒன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்துள்ளது. இதில் இளைஞரும் முதியவர் ஒருவரும் பயணித்துள்ளனர்.மேலும் சாரதி இவர்களிடம் பணம் கோரியுள்ளார். எனினும் இருவரும் தம்மிடம் பணம் இல்லையென தெரிவித்துள்னர்.

எனினும் இதனையடுத்து அவர்கள் இருவரையும் முச்சக்கர வண்டியில் இருந்து அதன் சாரதி இறக்கிவிட்டுள்ளார்.எனினும் அதிலிருந்த வயோதிபர் முழுவதுமாக இறங்குவதற்கு முன்னதாக சாரதி முச்சக்கர வண்டியை செலுத்தியதால் அவ்வயோதிபர் கீழே விழுந்துள்ளார்.

மேலும் அதன் பின்னர் குறித்த வயோதிபரை அவருடன் வந்த மற்றைய நபர் தரையில் கொடூரமாக இழுத்துச்சென்று எரிபொருள் நிலையத்திற்கருகில் விட்டுச்சென்றுள்ளார்.

மேலும் சிறிது நேரம் கழித்து குறித்த வயோதிபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

எனினும் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மொரட்டுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment