களுத்துறை -நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 06 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று இரவு இவ்வாறு 03 ஆண்கள், 03.பெண்கள் என 6 பேர் தப்பியோடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களை கண்டறிய விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனைவரும் ஒரே வார்ட் அறையில் இருந்த நிலையில் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment