Sponsor

Sunday, May 9, 2021

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்து !


 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் பொத்துவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

இச்சம்பவம் இன்று காலை 10 40 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர்

அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தின் டயர் வெடித்ததனாலேயே இவ்வாறு வாகனம் குடைசாய்ந்து இந்த விபத்து சம்பவத்துள்ளதாக தெரியவருகின்றது

இச்சம்பவத்தின் போது சாரதி பிரயத்தனத்தால் வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திடீர் என பிரேக் பிடித்ததால் வாகனம் பாலத்தின் கீழே விழாமல் தவிர்க்கப்பட்டதுடன் சிலிண்டர்கள் வீதியில் விழுந்து சிதறிக் கிடந்தன. எனினும் அதிஷ்டவசமாக எதுவும் வெடிக்கவில்லை.

இதனால் சிறிது நேரம் இப்பாதையால் போக்கு வரத்து தடைப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணையை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment