Sponsor

Thursday, May 20, 2021

வவுனியாவில் இரண்டாவது நபர் கொரோனாவிற்கு பலியானார்....!



 வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவல்குளத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் இன்று மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை இவரது மரணத்துடன் வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment