Sponsor

Wednesday, May 12, 2021

யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்று கைது!

 


யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து, யாழ்ப்பாணம்- குருநகரில் பதுங்கிருந்த 4பேர் கொண்ட குடும்பமொன்றே இவ்வாறு பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் , அவர்களை சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தியுள்ளனர். தமிழகம்- ஈரோடு மாவட்டம், அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிபப் பெண், அவருடைய பிள்ளை, அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகியோரே சட்டவிரோத கடற்பயணம் ஊடாக நாட்டுக்குள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் தற்போது பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவற்றின் முடிவுகள் வெளியானதன் பின்னரே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment