நாடளாவிய ரீதியில் நாளை 21 ம் திகதி இரவு 11 முதல் 25 அதிகாலை நான்கு மணிவரையும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், இன்று பேலியகொட மெனிங் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் குழுமி இருந்தார்கள். நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பொருளாதார நிலையங்களும் மூடப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் 28 ஆம் திகதி அதிகாலை வரையிலும் மீண்டும் பொருளாதார நிலையங்கள் மூடப்படும் என அந்த மைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளன.
No comments:
Post a Comment